Sunday, May 23, 2010

மாற்றம்

நன்மையும் நான்
தீமையும் நான்
உன்னில் நான்..
உன் வெளியில் நான்..
நான் இல்லாமல் நீயில்லை
நீ இருக்கும்வரை நான் மறைவதில்லை..
நீ இறந்தபின்னும் இறப்பதில்லை.
எவரிலும் நான்..
எதிலும் நான்..
உணரவில்லை நீ..
செய்வதறியாமல் பழித்தாய் மற்றவரை


நான் இருப்பதறிந்தும் பயனில்லை..
சினம் கொண்டாய்..
மற்றவரிடம் நான் அதிகமாய் இருப்பதாய் எண்ணம்.
உன்னில் இருக்கும் என்னிடம் பாரா முகம் ஏனோ.


எனை ஏற்க ஏன் மனமில்லை..
நான் மறைந்தால் என் செய்வாய்..
ஒரு நிமிடம் யோசித்தாயா..
அகிலமே அதிர்ந்து விடாதா...

நான் எப்போதும் எதிலும் உறைவதால் தான்
நீ நீயானாய்.
அவள் அவளானாள்.
அவன் அவனானான்.
அது அதுவானது..

அழியா
விசித்திரம் நான்.
எனை அகற்ற முயல்வதை மற..
மீறினால் விபரீதமே என்பதை ஒப்புக்கொள்.
வாழ்வுள்ளவரை நான் நிரந்தரம்.
அனுபவித்துப்பார் முழுமையாய்,
நானே உனை விலக முயலினும்
அணைத்துக் கொள்வாய் என்பதில் ஐயமில்லை..

2 comments: